தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
அரியலூர், ஏப். 1: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடத்தப்பட்டது.
பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் செ. அருள்ராஜ் தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளிóன் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
பேரணியில் இயற்பியல் முதுகலை ஆசிரியர் பி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் சு. முத்துராமலிங்கம் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை ஜா.ஆ. பாலின் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment